தேள் கொட்டியதால் விமானம் தரையிறக்கம்

விமானத்தில் பயணித்த பெண்ணொருவருக்கு தேள் கொட்டிய சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் பகுதியிலிருந்து போர்ட் லேண்டுக்கு பயணித்த அலாஸ்கா எயார்லைன்ஸிற்கு சொந்தமான 567 என்ற பயணிகள் விமான வான் பரப்பில் பறந்துகொண்டிருந்த போது, இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் கையில் தேள் கொட்டியது.

இதனால் வலியால் துடித்த அவர் அலறி கூச்சலிட்டார். அதை தொடர்ந்து விமானம் மீண்டும் லொஸ்ஏஞ்சல்ஸ்சுக்கே திருப்பப்பட்டு அங்கு தரை இறக்கப்பட்டது.

பின்னர் அப்பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே அவரை கொட்டிய தேள் அடித்து கொல்லப்பட்டது. விமானத்துக்குள் இது போன்று வேறு நச்சு பூச்சிகள் உள்ளனவா? என சோதனையிடப்பட்டது.
அதன்பின்னர் சிறிதுநேர கால தாமதத்துக்கு பின் மீண்டும் புறப்பட்டு சென்றது.VK
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -