விமல் வீரவன்ஸவின் மனைவியை பொலிஸார் கைது செய்யாவிட்டால் வீதிக்கு இறங்குவேன்-புத்ததாஸ

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவின் மனைவியை பொலிஸார் கைது செய்யாவிட்டால் ஐயாயிரம் மக்களுடன் வீதிக்கு இறங்குவேன் என கடுவெல நகர முதல்வர் ஜீ.எச்.புத்ததாஸ தெரிவித்துள்ளார்.

கடுவெல முதல்வர் அலுவலகத்தில் நேற்று இடம் பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விமல் வீரவன்சவின் மனைவி சட்டரீதியாக தண்டிக்கப்படவில்லை என்றால் நான் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மக்களை அழைத்துக்கொண்டு வீதிக்கு இறங்குவேன் எனவும் நாட்டின் சகல மக்களுக்கும் ஒரே மாதிரியான நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடுவெல நகர முதல்வர் என்ற ரீதியில் நானும் பொது மக்களும் இந்த நாடகத்தை பொறுத்தது போதும். நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து நல்லாட்சியை மேம்படுத்துங்கள் என்று ஜீ.எச்.புத்ததாஸ தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -