ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக அமைச்சர் ராஜித சேனாரத்னவை நியமிப்பதற்கு , அக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியிருக்கும் கட்சியின் அதியுச்சபீட மற்றும் தேசிய நிறைவேற்றுக் குழு கூட்டத்தின்போது இந்நியமனம் வழங்கப்படும் எனவும் தெரிய வருகின்றது.
சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராகக் கடமையாற்றிய முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, ஆட்சி மாற்றத்தோடு நாட்டை விட்டு வெளியேறிச் சென்றதன் காரணமாகவே இப்பதவி வெற்றிடமானது என்பது குறிப்பிடத்தக்கது.
