Tharjumillath-
பொத்துவில் பிரதேசத்தின் சுகாதார வைத்திய அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் 2015.02.16ஆம் திகதி பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில்கௌரவ தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாஸித் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறி லங்கா முஸ்லிம்காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சி. பைசால் காசிம் உரையாற்றும் பொழுது,
கடந்த காலத்தில சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்களினால் எந்த அபிவிருத்தியும் செய்ய முடியாத நிலையிலே மகிந்தஅரசாங்கத்தில் நாம் இருந்தோம். மகிந்த அரசாங்மானது எங்களிடம் மக்களுக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்ககாள்ளக்கூடிய எந்த அதிகாரத்தினையும் வழங்கவில்லை.
இதனால்தான் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாலோ, மாகாண சபை உறுப்பினர்களாலோ, பொத்துவில் பிரதேச முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜனாப்.எஸ்.எஸ்.பி.மஜீத் அவர்களாலும் பொத்துவில் பிரதேசத்திற்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கெள்ள முடியாதிருந்தது எனவும் தெரிவித்தார்.
.jpg)
.jpg)