அம்பாந்தோட்டை துறைமுகத்தின் அரைவாசிப் பகுதி சீனாவிற்கு சொந்தமாகியுள்ளது- அமைச்சர் லக்ஸ்மன்

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் அரைவாசிப் பகுதி சீனாவிற்கு சொந்தமாகியுள்ளது என பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு முதலீடுகளே தேவைப்படுகின்றது. கடன் பெற்றுக் கொள்வதில் அர்த்தமில்லை.

கடந்த அரசாங்கம் எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்திற்கும் இடமளிக்கவில்லை. முடிந்தளவு கடன்களையே பெற்றுக்கொண்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட கடனை செலுத்த முடியாத காரணத்தினால், அரைவாசி துறைமுகம் சீனாவிற்கு சொந்தமாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -