நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்மா பள்ளிவாசலின் சமூக சேவைப் பிரிவு மற்றும் அமான சனசமூக நிலையத்தினதும் ஏற்பாட்டில் 05வது முறையாக இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு இன்று (25.01.2015 - ஞாயிற்றுக் கிழமை) நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் எஸ்.எச்.எம். ஹைருல்லாஹ் மௌலானா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த மாபெரும் இரத்ததான நிகழ்வில் அரசியல்வாதிகள், கல்விமான்கள்இ சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என 250க்கும் அதிகமானோர்கள் தங்கள் இரத்தங்களை தானம் செய்தனர்.
இதேவேளை நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்மா பள்ளிவாசலில் கடந்த ஆண்டு இடம்பெற்ற இரத்ததான முகாமில் 223 பேர் தங்கள் இரத்தங்களை தானம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.