அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தில் 42வது வருடாந்த பொதுக்கூட்டம்!

எம்.வை.அமீர்.எம்.ஐ.சம்சுதீன்-

ம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் இருந்து உதைபந்தாட்ட விளையாட்டில் பிரகாசித்து விளங்கும் விளையாட்டுக்கழகங்களை உள்ளடக்கிய அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் 42வது வருடாந்த பொதுக்கூட்டம் 25-01-2015ல் மருதமுனை கலாச்சார மண்டபத்தில் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தில் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணியும் கல்முனை மாநகரசபையின் உறுப்பினருமான ஏ.எம்.ரக்கீப் தலைமையில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தில் பொதுச்செயலாளர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப்பின் வழிநடத்துதலுடன் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலில் இச்சங்கத்தில் உயர் சபை உறுப்பினர்கள் உட்பட பொதுச்சபை அங்கத்தினரும் கலந்து கொண்டனர்.

இன்றைய அமர்வில் சபையின் கடந்தகால நடவடிக்கைகள் பொதுச்சபையினால் அங்கீகரிக்கப்பட்டதுடன் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -