எம்.வை.அமீர்.எம்.ஐ.சம்சுதீன்-
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் இருந்து உதைபந்தாட்ட விளையாட்டில் பிரகாசித்து விளங்கும் விளையாட்டுக்கழகங்களை உள்ளடக்கிய அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் 42வது வருடாந்த பொதுக்கூட்டம் 25-01-2015ல் மருதமுனை கலாச்சார மண்டபத்தில் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தில் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணியும் கல்முனை மாநகரசபையின் உறுப்பினருமான ஏ.எம்.ரக்கீப் தலைமையில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தில் பொதுச்செயலாளர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப்பின் வழிநடத்துதலுடன் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலில் இச்சங்கத்தில் உயர் சபை உறுப்பினர்கள் உட்பட பொதுச்சபை அங்கத்தினரும் கலந்து கொண்டனர்.
இன்றைய அமர்வில் சபையின் கடந்தகால நடவடிக்கைகள் பொதுச்சபையினால் அங்கீகரிக்கப்பட்டதுடன் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.