ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-
வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச வீடமைப்பு, சமூர்த்தி, திவிநெகும அதிகாரிகளை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை(23) சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது தனது அமைச்சின்கீழுள்ள 25 மாவட்டங்களின் அதிகாரிகளை சந்தித்து அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்திற்கமைய 50 ஆயிரம் வீடுகளை 25 மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அமைச்சின் செயலாளர் டி.எச்.எல்.விமலசிறி பெரேரா, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவர் லக்விஜய சாதர கலன்சூரிய, திவிநெகும அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.ஏ.கே.ரனவக்க ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.