அமைச்சர் சஜித் பிரேமதாச வீடமைப்பு, சமூர்த்தி, திவிநெகும அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடல்!

ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-
வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச வீடமைப்பு, சமூர்த்தி, திவிநெகும அதிகாரிகளை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை(23) சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது தனது அமைச்சின்கீழுள்ள 25 மாவட்டங்களின் அதிகாரிகளை சந்தித்து அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்திற்கமைய 50 ஆயிரம் வீடுகளை 25 மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அமைச்சின் செயலாளர் டி.எச்.எல்.விமலசிறி பெரேரா, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவர் லக்விஜய சாதர கலன்சூரிய, திவிநெகும அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.ஏ.கே.ரனவக்க ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -