அட்டாளைச்சேனையில் முஹர்ரம் சிறப்புக் கவியரங்கு..!

ட்டாளைச்சேனை பிரதேச கலாச்சார அதிகாரசபையின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனை பிரதேச கலாச்சார விழாவின் ஓர் அங்கமாக "முஹர்ரம் சிறப்பு கவியரங்கு" நேற்று (2016.11.21) பிற்பகல் 3.30 மணியளவில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் இடம் பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு ரி்.ஜே.அதிசயராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கலாச்சார விழாவின் முஹர்ரம் சிறப்புக் கவியரங்கு நிகழ்ச்சியினை கலாபூசணம் பாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்கள் தலைமையேற்று தொகுத்து வழங்கினார்.

கெளரவ அதிதியாக கலாநிதி டொக்டர் கே.எல்.நக்பர் அவர்களும் பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுடீன், கலாசார உத்தியோகத்தர் ஜனாப் எம்.ஐ அஸ்ரப் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நெளபிசா, ரிபாஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இக்கவியரங்கில் எம்.ஐ.எம்.ஏ.ரவூப், ஈழமதி ஜப்பார், இஸட்.எப்.றிப்னா, ஏ.எச்.நெளசாத், எஸ்.என்.எஸ்.றிஸ்லி சம்சாட். ஏ.ஆர்.எம்.பெளஸான் ஆகியோர் கலந்து கவிமழை பொழி்ந்தனர். கலந்துகொண்ட கலைஞர்கலுக்கு சான்றிதழும் பரிசுப்பொதியும் வழங்கி கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -