வெயாங்கொட பிரதேசத்திலுள்ர பாடசாலையொன்றிலை தரம் 10இல் கல்வி பயிலும் மாணவனும்,தரம் 9 இல் கல்வி பயிலும் மாணவனும் ஒரெ மாணவியுடன் கொண்ட காதல் உறவின் அடிப்படையில் இரு மாணவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக வெயாங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மாணவி தரம் 9 இல் கல்வி பயிலும் மாணவனுடன் காதல் தொடர்பு கொண்டிருப்பதை அறிந்த தரம் 10 மாணவன் பாடசாலை முடிந்து வீடு செல்லும் வழியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment