முசலி தேசிய பாடசாலைக்கு ஏ.எஸ்.எம்.லாஹிர்(பி.கொம்) அவர்கள் நியமிக்கப்பட வேண்டும்!

எஸ்.என்.எச்.டீன்-

ன்.முசலி தேசிய பாடசாலைக்கு அதிபர் தரம் 01 யைச் சேர்நத ஏ.எஸ்.எம்.லாஹிர் என்பவரை நியமிக்குமாறு முசலிப்பிரதேச சமூக நிறுவனங்கள் கோரிக்கை விடுக்கின்றன.யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வர்த்தகப் பட்டதாரியான இவர் ஆசிரியராக , ஆசிரிய ஆலோசகராக , அதிபராக பல பாடசலைகளில் சேவை புரிந்துள்ளார். திறந்த பல்கலைக்கழக வளவாளராகவும் , ஆசிரியர் தொலைக்கல்வி விரிவுரையளராகவும் பணிபுரிந்துள்ளார்.கல்விப்புலம் தொடர்பாக மிகுந்த அறிவும் , அனுபவமும் நிறைந்த இவர் மிகவும் பொருத்தமானவர்.

சிலாவத்துறையை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது புத்தளத்தில் வசித்து வருகின்றார்.இவரை முசலிப்பாடசாலைக்கு அதிபராக நியமிப்பதன் மூலம் மன்னார் வலயக்கல்வி அலுவலகம் தமது பணியை இலகுவாகவும் , சிறப்பாகவும் கொண்டு செல்லச் சிறப்பாபாக இருக்கும்.

முசலிப் புத்திஜீவிகள் ஒன்றியம் , பழைய மணவர் ஒன்றியம் , முசலிக் கல்விப் பொருளாதார அபிவிருத்தி நிறுவனம் , பிரதேச கிராம அபிவிருத்திச் சங்கம் போன்றன கோரிக்கை விடுகின்றன.இவ்விடயத்தில் அரசியல் தலைவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவை வலியுறுத்துகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :