ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஜவிற்காக சூறாவளி பிரச்சாரம் செய்யவுள்ளேன் -சிராஸ்

யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் சில தினங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஜவிற்காக சூறாவளி பிரச்சாரம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தொழிலதிபரும் முன்னாள் வட மாகாண வேட்பாளருமான முஹம்மட் சிராஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் மஹிந்தவை ஆதரிக்கவுள்ளேன்.அந்த வகையில் என்னை கடந்த மாகாண சபை தேர்தலில் 3000க்கு மேற்பட்ட வாக்குகளால் ஆதரித்த மக்களிடம் ஜனாதிபதிக்காக வாக்கு கேட்கின்றேன்.அவர்கள் அதை வரவேற்றார்கள்,பல குறைபாடுகள்,அபிவிருத்தி தொடர்பாக மகஜர்களை தருவதற்கு தயாராக உள்ளனர்.

இதனால் யாழின் சகல இடங்களிற்கும் ஓரிரு நாட்களில் சென்று மக்களிடம் கலந்துரையாடவுள்ளேன்.சில அரசியல் வாதிகள் என்னை இத்தேர்தலில் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிக்க கூடாது என்பதற்காக வீண் வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்பி விடுகின்றனர்.நான் அவ்வாறில்லை.மக்களுடன் தொடர்ந்து பயணிப்பேன்.எதிர்கால ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே என்பதை அம்மக்கள் தற்போது தேர்ந்தெடுத்து விட்டனர்.மக்களின் தேவைகளை தற்போதும் ,எதிர்காலத்திலும் நிறைவேற்றவுள்ளேன். என அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :