ஜனாதிபதி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் வைபவம் இன்று காலை கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நடைபெற்றது.
தற்போதைய அரசாங்கம் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாகவும் வன்முறைகளும், ஊழலும் அதிகரித்துள்ளதாகவும் இதன் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிர்வாகத்திற்கு எதிர்வரும் 08 ஆம் திகதி முற்றுப்புள்ளி வைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார்.
தற்போது தேர்தல் வன்முறைகள் அதிகரிக்கப்பட்டு தங்களது அரசியல் பிரசாரத்திற்கு தடைகளை ஏற்படுத்துவதாகவும் , எவ்வாறாயினும் தடைகளை தாண்டி மக்களின் ஆதரவுடன் வெற்றி பெறவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
“நூறு நாட்களில் புதிய தேசம்” எனும் தலைப்பில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.News1st