உயர்நீதிமன்றத்தின் ஆலோ­ச­னையை ஜனா­தி­ப­திக்கு அனுப்­பி­வைத்­துள்­ளனர்

னா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வினால் மூன்­றா­வது தட­வை­யாக ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யுமா? முடி­யாதா? என்ற உயர்நீதி­மன்­றத்தின் ஆலோ­சனை நேற்று மாலை அல­ரி­மா­ளி­கைக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது. இந்த விடயம் தொடர்பில்

நேற்று ஆராய்ந்த உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்கள் தமது ஆலோ­ச­னையை ஜனா­தி­ப­திக்கு அனுப்­பி­வைத்­துள்­ளனர்.

பிர­தம நீதி­ய­ரசர் மொஹான் பீரிஸ் தலை­மையில் உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்­க­ளான கே.ஸ்ரீபவன், சந்­திரா ஏக்­க­நா­யக்க,
பிரி­யசான் டெப் , ஈவா வன­சுந்­தர, ரோஹினி மார­சிங்க, புவ­னேக அலு­வி­காரை, சிசிர டி அப்று, சரத் டி அப்று, பிரி­யந்த ஜய­வர்த்­தன ஆகியோர் இந்த மனுவை விசா­ரித்து நேற்று ஆலோ­ச­னையை அல­ரி­மா­ளிக்­கைக்கு அனுப்­பி­யுள்­ளனர்.

இந்த விவகாரத்தை முழு நீதியரசர் குழுமம் ஆராயும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் 10 நீதியசர்கள் மட்டுமே ஆராய்ந்து அபிப்பிராயத்தை அனுப்பிவைத்துள்ளனர். உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளிநாட்டுக்கு சென்றிருப்பதால் நீதியரசரான சலீம் மஸ்ருப் இந்த குழுமத்தில் பங்கேற்கவில்லை என்று உயர்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

தன்னால் மூன்­றா­வது தட­வை­யாக ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யுமா என்­பது தொடர்பில் ஆலோ­சனை வழங்­கு­மாறு கடந்த வாரம் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ உயர் நீதி­மன்­றத்­திடம் கோரிக்­கை­வி­டுத்­தி­ருந்தார். இது தொடர்பில் எழுத்து மூல­மான சமர்ப்­ப­ணங்­களை 7 ஆம் திக­திக்கு முன்னர் அனுப்­பு­மாறு சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்­தி­டமும் சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­க­ளி­டமும் உயர்­நீ­தி­மன்றப் பதி­வாளர் கோரி­யி­ருந்தார்.

இந்தக் கோரிக்­கைக்கு அமைய ஜனா­தி­ப­திக்கு ஆத­ர­வா­கவும் எதி­ரா­கவும் 38 மனுக்கள் உயர் நீதி­மன்­றத்­திற்கு அனுப்­பப்­பட்­டி­ருந்­தன.

குறிப்­பாக பிர­தமர் டி.எம்.ஜய­ரத்ன மற்றும் கோமின் தயா­சிறி, ஜெ.சி.வெலி­ய­முன பேரா­சி­ரியர் சுதந்த லிய­னகே, பேரா­சி­ரியர் சம்பத் பண்­டார அம­ர­துங்க, கலா­நிதி பாக்­கிய சோதி சர­வ­ண­முத்து, சுனில் வட்­ட­கல ஊட­க­வி­ய­லாளர் கே.டப்ள்யூ ஜன­ரஞ்­சன உள்­ளிட்ட 38 பேர் மனுக்­களை உயர் நிதி­மன்­றத்­திற்கு சமர்ப்­பித்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில் நேற்று இது தொடர்பில் ஆராய்ந்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு தமது தீர்மானத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ளதாக. சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உப்புல் ஜயசூரியவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :