அக்கரைப்பற்று , அட்டாளைச்சேனை பிரதேசங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதிப் பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு நபர்களுக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றினால் ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்றுப் போக்குவரத்துப் பொலிஸாரால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவானுமாகிய எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் இன்று (12) புதன்கிழமை ஆஜர் செய்தபோது ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 7 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.

0 comments :
Post a Comment