கிழக்கு மாகாண அஞ்சல் தின வைபவங்கள் இம்மாதம் 16ம் திகதி

பி. முஹாஜிரீன்-

லக அஞ்சல் தினத்தையொட்டி 2014ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண அஞ்சல் தின வைபவங்கள் இம்மாதம் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு வின்சன் மகளிர் தேசிய பாடசாலையில் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் வி.விவகானந்தலிங்கம் தெரிவித்தார்.

இவ்வைபவத்திற்கு பிரதம அதிதியாக அஞ்சல் மா அதிபதி டீ.எல்.பீ.ஆர். அபயரத்ன கலந்து கொள்ளவுள்ளார்.

உலக அஞ்சல் தினத்தையொட்டி அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள், மற்றும் ஊழியர்களிடையே நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்று மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாண தபால், உபதபால் அதிபர்களும் மற்றும் ஊழியர்களும் கௌரவிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் வி.விவகானந்தலிங்கம் மேலும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :