ரஜினியை அரசியலுக்கு இழுக்க காஞ்சி ஆன்மீகப் புள்ளி மூலம் முயற்சித்து வருகிறது பாஜக என தகவல்கள்

ஜினியை அரசியலுக்கு இழுக்க காஞ்சி ஆன்மீகப் புள்ளி மூலம் முயற்சித்து வருகிறது பாஜக என தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஞ்சி சங்கர மடம், அதன் கட்டுப்பாட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் போன்றவற்றுக்கு ரஜினி நேரடியாகப் போன மாதிரி வெளியில் தெரியாது. ஆனாலும் அவர் தரப்பில் அடிக்கடி தகவல்கள் பரிமாறப்படுவதாகக் கூறுகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு காமாட்சி அம்மன் கோவிலுக்கு ரஜினி போனாராம்.. சென்னை திரும்பியதும், தன்னை ஆசி கூறி அனுப்பிய ஆன்மீகப்புள்ளிக்கு தனது கைப்பட கடிதம் எழுதினாராம்.

அதில் நீங்கள் அருள்வாக்கு கொடுக்கும் அன்று நிச்சயம் அரசியலில் ஈடுபடுவேன். அதற்காக காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தாராம்.

இந்த கடித விஷயம் பாஜக தரப்புக்குத் தெரிய வந்த பிறகுதான், ரஜினியை நெருக்க ஆரம்பித்தனர் பாஜகவினர். எடியூரப்பா மற்றும் ஒரு சினிமா பிரபலம் ரஜினியுடன் பேச்சு நடத்தியதன் பின்னணி இதுதானாம். பேச்சுவார்த்தை நிற்கவில்லை,

இன்னும் தொடர்கிறது. ஆனால் ரஜினி இப்போதும் அந்த பழைய மனநிலையிலேயே ரஜினி இருப்பாரா? என்ற சந்தேகமும் நிலவுகிறது.

பார்க்கலாம், கல்லை எறிந்து பார்ப்போம்... விழுந்தால் பழம் கிடைக்கும். இல்லையேல் போவது ஒரு கல்தானே என்பது பாஜக கணக்கு!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :