அன்று தனிநாட்டுக் கோரிக்கையினை நாம் எதிர்த்திருக்காவிடின் ஈழம் உருவாகியிருக்கும்:மு.கா பதிலடி

பிரி­வி­னை­வா­தத்­திற்கு துணை­போகும் கட்சி நாமல்ல. அன்று நாம் தனி­நாட்டுக் கோரிக்­கை­யினை எதிர்த்­தி­ருக்­கா­விடின் இன்று தனி ஈழம் உரு­வா­கி­யி­ருக்கும் என தெரி­விக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பு­ட­னான புதிய கூட்­டணி தமிழ் பேசும் மக்­களின் உரி­மை­க­ளுக்­கான அடித்­தளம் எனவும் சுட்டிக் காட்­டி­யுள்­ளது.

முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் கூட்­ட­மைப்பு ஆகிய கட்­சி­களின் புதிய கூட்­டணி அர­சாங்­கத்தை கவிழ்ப்­ப­தற்­கான சதி­யெ­னவும் பிரி­வி­னை­யினை தூண்டும் செயற்­பா­டெ­னவும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­துள்ள நிலையில் முஸ்லிம் காங்­கி­ரஸின் கருத்­தினை வின­விய போதே கட்­சியின் பொதுச் செய­லாளர் ஹசன் அலி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஒரு­போதும் இன­வா­தத்­திற்கும் பிரி­வி­னை­வாத கோட்­பாட்­டிற்கும் துணை­போ­க­வில்லை. ஆத­ரவு வழங்கப் போவ­து­மில்லை. 1990 ஆம் ஆண்டு வர­த­ராஜப் பெருமாள் தனி நாட்டு பிர­க­ட­னத்தின் மூலம் வடக்கு கிழக்­கினை பிரிக்க முயற்­சித்த போது அன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பிரி­வி­னை­யினை எதிர்த்து செயற்­பட்­டது. அன்று நாம் ஆத­ர­வ­ளித்­தி­ருந்தால் இன்று வடக்கு, கிழக்கில் தனித்­தா­யகம் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்கும். அதேபோல் அன்று தனி நாட்­டினை கோரிய போது எந்­த­வொரு சிங்­களத் தலை­வர்­களும் வாய் திறக்­க­வில்லை. ஆனால், இன்று வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் இரு சமூ­கங்­களும் அமை­தி­யாக வாழ விரும்பும் போது சிங்­கள இன­வாத கட்­சிகள் அதனை குழப்பும் நோக்கில் செயற்­ப­டு­கின்­றன. உண்­மை­யி­லேயே இன்று பிரி­வி­னை­வாதம் முழு­மை­யாக சிங்­கள இன­வாத கட்­சி­க­ளி­டமே உள்­ளது. தமிழ், முஸ்லிம் மக்கள் எதைச் செய்­தாலும் இவர்கள் சந்­தேகக் கண்­ணோட்­டத்­தி­லேயே பார்க்­கின்­றனர்.

விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் இணைந்து முஸ்­லிம்­களும் ஆயுதம் ஏந்தும் நிலைமை ஏற்­ப­ட­வி­ருந்த சூழ்­நி­லையில் எமது தலைவர் அஷ்ரப்பினால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. அவ்­வா­றான நாட்டின் அமை­திக்­காக செயற்­பட்ட எம்மை பிரி­வி­னை­வா­திகள் என சுட்­டிக்­காட்டும் பேரி­ன­வா­தி­களின் கருத்­தினை வன்­மை­யாக கண்­டிக்­கின்றோம்.

மேலும், நாம் வெறு­மனே தமிழ்த் தேசியக்

கூட்­ட­மைப்­புடன் மட்­டுமே பேச்­சு­வார்த்தை நடத்­த­வில்லை. நாம் ஏனைய அர­சியல் கட்­சி­க­ளு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி நாட்டின் பிரச்­சி­னைகள் தொடர்பில் தீர்­வு­காண முயற்­சிக்­கின்றோம். வடக்கு கிழக்கு என்­பது தமிழ் முஸ்லிம் மக்­களின் தாயகம் எனவே, தமிழ் மக்­களின் தலை­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி தமிழ் முஸ்லிம் சமூ­கங்­க­ளி­டை­யே­யான ஒற்­று­மை­யான பய­ணத்­திற்­கான அடித்­த­ளத்­தி­னையே இவ்­விரு கட்­சி­களும் ஏற்படுத்த முயற்­சிக்­கின்­றன. இது அர­சாங்க கூட்டு கட்­சி­க­ளுக்கு உறுத்­து­மாக இருப்பின் அவர்­களின் எண்­ணங்­க­ளுக்­காக எமது கொள்­கை­களை மாற்­றிக்­கொள்ள முடி­யாது.

மேலும், வடக்­கையும் கிழக்­கையும் பிரித்து தனி நாடாக்கும் எண்ணம் கூட்டமைப்பினருக்கும் எமக்கும் இல்லை என்பது கடந்த காலங்களில் தெளிவாக கூறப்பட்டுவிட்டது. நாம் எமது மக்களின் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் மட்டுமே போராடுகின்றோம் என்பதை அரசாங்கம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :