அமைச்சர் றிசாட் திரை­நீக்கம் செய்­ய­வி­ருந்த பெயர்க்கல் மர்­ம­ந­பர்­களால் உடைத்­த­ழிப்பு

மைச்சர் றிசாட் பதி­யு­தீனால் திறந்து வைக்க ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த மின்­ பி­றப்­பாக்­கியின் பெயர்க் கல்­லினை மர்­ம­ந­பர்கள் உடைத்துச் சேத­மாக்­கி­யுள்­ளனர்.

இச்­சம்­பவம் கடந்த சனிக்­கி­ழமை முல்­லைத்­தீவு மாவட்­டத்­தி­லுள்ள பாண்­டி­யன்­குளம் பிர­தேச செயலர் பிரிவில் நம­ணங்­கு­ளத்தில் இடம்­பெற்­றுள்­ளது.
அமைச்சர் றிசாட் பதி­யுதீன் கடந்த சனிக்­கி­ழமை வன்னிப் பிர­தே­சங்­க­ளுக்கு விஜயம் செய்து வவு­னிக்­கு­ளத்­தி­லுள்ள பிர­தான தபா­ல­கத்தைத் திறந்து வைத்­துள்ளார். இவ்­வி­ஜ­யத்­தின்­போது வவு­னிக்­கு­ளத்தின் அயல் கிரா­மங்­க­ளான கொல்­வி­ளாங்­குளம், நம­ணங்­குளம், பாலி­நகர், அம்­பாள்­புரம் ஆகிய கிரா­மங்­க­ளுக்­கான மின் இணைப்­பு­களின் பிர­தான மின்­பி­றப்­பாக்­கி­க­ளையும் திறந்து வைத்­துள்ளார்.

இதன்­போது திரை­நீக்கம் செய்­வ­தற்­காக நம­ணங்­கு­ளத்தில் அமைக்­கப்­பட்­டி­ருந்த பெயர்க்­கல்லை மர்­ம­ ந­பர்கள் இர­வோடு இர­வாக உடைத்துச் சேத­மாக்­கி­யுள்­ளனர். இதனால் இப்­பெ­யர்க்கல் சேத­ம­டைந்த நிலை­யி­லேயே அமைச்சர் றிசாட் பதி­யு­தினால் திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :