பொத்துவிலில் மதங்களுக்கிடையிலான நல்லுறவினை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் முகமாக கலாச்சார நிகழ்வு

எம்.ஏ தாஜகான்-

தங்களுக்கிடையிலான நல்லுறவினை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் முகமாக அம்பாறை  மாவட்ட திருக்கோவில் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் இன்று (2014.10.10) கலாச்சார  நிகழ்வு பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. 

இந் நிகழ்வு ESDFP எனும் திட்டத்திற்க்கேற்ப தமிழ் முஸ்லிம் சிங்கள பாடசாலை  மாணவர்களையும் இந்து பௌத்தம் இஸ்லாம் கிறிஸ்த்தவ சமய பெரியார்களின் பங்கு  பற்றுதலுடனும் இடம் பெற்றது. 

பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரி பொத்துவில் மெதடிஸ் தமிழ் மகா வித்தியாலயம்  பொத்துவில் சிங்கள வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களினால் இனங்களுக்கிடையிலான  புரிந்துணர்வை ஏற்படுத்துமுகமாக கலாச்சார நிகழ்வுகளும் அரங்கேறியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக திருக்கோவில் கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர். சுகிர்தராஜன் அவர்கள் கலந்து கொண்டு இனங்களுக்கிடையிலான ஒற்றுமையின் அவசியம் பற்றி சிறப்புரை நிகழ்த்தினார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :