சித்தீக் காரியப்பர்-
தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் முடிவெடுப்பதில் அர்த்தமேயில்லை.முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்டவர், குஜராத்தின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர் என்று பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டப்பட்ட மோடிக்கு ஆதரவாக ஹபாயா அணிந்த முஸ்லிம் பெண்கள் பிரசாரத்தில் ஈடுபட்டதை காணொளியில் கண்டேன்.
என முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான அமைச்சர் பஷீர் சேகுதாவூத் அவர்கள் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கும் ஒரு செய்தியை அவர் கூறியுள்ளார் என்று நான் நினைக்கிறேன்.
ஏறாவூரில் இடம்பெற்ற சேவை நலன் பாராட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் ஆற்றிய உரையின் முக்கிய சில பகுதிகளை காலத்தின் தேவை, முஸ்லிம் சிந்திக்க வேண்டிய அவசியம் கருதி கீழே பதிவிடுகிறேன். இதனை தெரிவித்தார்.
சிறுபான்மை அரசியலில் பெரிய புராணக் கதைகள் எல்லாம் உலவுவது வழமை. இந்தப் புராணக் கதைகளுக்குப் பின்னால் சென்று அவற்றைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இந்த சமூகத்தைப் பிழையாக வழி நடத்தி நட்டாற்றில் கைவிட்டுவிடக் கூடாது என்பதிலே நான் அக்கறையோடு இருக்கின்றேன். என் வழி நடத்தலின் உள்ளார்ந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் என்னைப் பற்றி விமர்சிக்கலாம். ஆனால் இந்த விமர்சனங்களுக்கு நான் பதிலளிப்பதை விட இந்த சமூகத்தைத் தவறாக வழி நடத்தி விடாமல் இருப்பதில் நான் மிகக் கவனமாக இருக்கின்றேன்.
இது சிறுபான்மையினருக்கு ஒரு இக்கட்டான காலக்கட்டம். இதிலே நாம் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்.பழி வாங்குவதற்கான அரசியலையும் நாம் செய்ய முடியாது.உணர்ச்சிவசப்பட்டு கொதித்தெழுந்து முன்னுக்கு ஓடி பின்னர் உணர்ச்சி குறைந்து சோர்வடைந்து தனித்துப் போன பிறகு பின்னுக்கு வந்து கூனிக் குறுகி நிற்பதெல்லாம் அழகல்ல.
நாம் உணர்ச்சிவசப்படத் தேவையுமில்லை. ஆத்திர மேலீட்டால் அவதிப்பட்டு முன்னுக்கு ஓட வேண்டிய அவசியம் இல்லை. நின்று நிதானித்து உற்றுக் கவனித்து உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தை நெறிப்படுத்த வேண்டும்.எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் நமது சமூகம் உறுதியான யதார்த்தமான நிலைப்பாட்டை எடுக்கத் தவறும் பட்சத்தில் அதன் பாதிப்புக்கள் 2022 ஆம் ஆண்டு வரை நீடிக்கும்.
அதுபற்றி முஸ்லிம் சமூகத்திலுள்ள எல்லோரும் ஒன்றிணைந்து ஏகோபித்த முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். ஆனால், அப்படி முடிவெடுப்பதற்கும் உள்ள கால அவகாசம் மிகக் குறுகியது. ஆகக் கூடியது மூன்று வாரங்கள் தான் இன்னமும் எஞ்சியிருக்கின்றன.
தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் முடிவெடுப்பதில் அர்த்தமேயில்லை.முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்டவர், குஜராத்தின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர் என்று பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டப்பட்ட மோடிக்கு ஆதரவாக ஹபாயா அணிந்த முஸ்லிம் பெண்கள் பிரசாரத்தில் ஈடுபட்டதை காணொளியில் கண்டேன். என்று கூறியுள்ளார்.

0 comments :
Post a Comment