அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தைக்கா நகர் பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவருக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றினால் ரூபா 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் 1 கிறாம் கஞ்சாவுடன் திங்கட்கிழமை (13) கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட நபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவானுமாகிய எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் இன்று (14) செவ்வாய்க்கிழமை ஆஜர் செய்தபோது ரூபா 10 ஆயிரம் அபராதம் விதித்தார்.
0 comments :
Post a Comment