மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதர் அபிவிருத்திச் சங்கங்களுக்கு நிதிகள்




த.நவோஜ்-

ட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் மீள்குடியேற்ற அமைச்சினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் பெண்களின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு பிரதேச செயலகம் தோறும் மாதர் அபிவிருத்திச் சங்கங்களுக்கு நிதிகள் வழங்கும் திட்டத்தில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாதர் அபிவிருத்தி சங்கங்களுக்கு நிதி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி.ரீ.தினேஸ் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாதர் அபிவிருத்திச் சங்கங்களுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் ஒன்பது மாதர் அபிவிருத்திச் சங்கங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன், வாழைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் வினோராஜ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :