தன்னுடைய பதவிக்காலத்தில் சர்வதேச ரீதியில் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு கவனம் பெற்றார்.
இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து மனித உரிமைப் பேரவையில் தீர்மானங்களை முன்வைத்து ஐக்கிய நாடுகளின் விசாரணையை முன்னெடுக்க வைப்பதில் நவநீதம்பிள்ளை முன்னின்று செயலாற்றினார்.
அத்தோடு, சிரிய மோதல்களில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வந்ததுடன், நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார்.
இதனிடையே, “ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையிலுள்ள நாடுகள் சர்வதேச ரீதியில் நடைபெறும் மோதல்களைக் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை” என்ற குற்றச்சாட்டை பாதுகாப்புச் சபையிலேயே நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தது அண்மையில் மிகுந்த அவதானம் பெற்றது. இந்த நிலையிலேயே, அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் பதவியிலிருந்து இன்று ஓய்வு பெற்றுச் செல்கிறார்.
ஐக்கிய நாடுகளின் புதிய மனித உரிமை ஆணையாளராக, ஜோர்தான் நாட்டின் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைன் இன்று முதல் (செப்டம்பர் 01, 2014) முறைப்படி பொறுப்பேற்கவுள்ளார்.
0 comments :
Post a Comment