தமிழன் தமி­ழ­னாக வாழ்­வ­தற்­கு சட்­டத்­த­ர­ணி­களின் பங்கு அவ­சியம்- சுவா­மி­நாதன்.எம்.பி

ட்டத்­துறை சார்ந்­த­வர்­களே இந்த நாட்டின் தலை­வர்­க­ளா­கவும் அர­சியல் துறை­யில் முன்­ன­ணியிலும் திகழ்­கின்­றார்கள். அவ்­வா­றான நிலையில் தமிழ் மொழியைப் பாது­காத்து தமிழன் தமி­ழ­னாக வாழ்­வ­தற்கு சட்­டத்­த­ர­ணி­களின் பங்கு மிகவும் அவ­சி­ய­மா­னது என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்தார்.

இலங்கை சட்­டக்­கல்­லூ­ரியின் சட்­ட­மா­ணவர் தமிழ் மன்­றத்தின் கலை­வி­ழாவும் நீதி முரசு மலர் வெளியீடும் நேற்று முன்­தினம் பம்­ப­லப்­பிட்டி சரஸ்­வதி அரங்கில் இடம்­பெற்­றது. 

இந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் சட்­டத்­த­ர­ணி­யு­மான டி.எம்.சுவா­மி­நாதன் கலந்து கொண்­ட­தோடு கௌரவ அதி­தி­க­ளாக இலங்கை சட்­டக்­கல்­லூ­ரியின் அதி­பரும், ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான கலா­நிதி ஜய­திஸ்ஸ டி கொஸ்தா, பொ­ரு­ளா­ளரும் சிரேஷ்ட சட்டத்­த­ர­ணி­யு­மான ஜி.ராஜ­கு­லேந்­திரா, பிரதி மன்­றா­டியார் அதி­பதி ஏ.எச்.எம்.டி.நவாஸ், சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஆர்.செல்­வஸ்­கந்தன் ஆகியோர் கலந்து கொண்­டனர். அத்­துடன் சட்ட மாணவர் தமிழ் மன்­றத்தின் தலைவர் அப்துல் ஜவார் எல்மி, செய­லாளர் கிரிஷாந் ராஜ­சூ­ரியர், உட்­பட நிர்­வாக அங்­கத்­த­வர்­களும் மாண­வர்­களும் பங்­கேற்­றனர். இந்­நி­கழ்வில் உரை­யாற்­று­கை­யி­லேயே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டி.எம்.சுவா­மி­நாதன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

ஐயாயிரம் ஆண்­டு­க­ளுக்கும் மேலான பழ­மை­வாய்ந்த தமிழ் மொழி­யா­னது பல்­வேறு சிறப்­புக்­களைக் கொண்­ட­தாகும். வர­லாற்­றிலே மூன்று சங்­கங்கள் இருந்­தன. இதன்­போ­தான தமிழ்­மொ­ழியின் சிறப்பு மிக்க பதி­வுகள் மதுரை வெள்ளப்­பெ­ருக்கால் அழி­வ­டைந்து விட்­டன. தற்­போது தமிழ் மொழியின் தொன்­மையை கூறு­வ­தற்கு தொல்­காப்­பியம் மட்­டுமே எஞ்­சி­யி­ருக்­கின்­றது.

1966ஆம் ஆண்டு இலங்கைச் சட்­டக்­கல்­லூ­ரியில் சட்ட மாணவர் தமிழ் மன்றம் உரு­வாக்­கப்­பட்­டது. இதன் முதற் தலை­வ­ராக மறைந்த அமிர்ந்­த­லிங்கம் அவர்­களே தலை­வ­ராக விளங்­கினார். இன்றும் சட்ட மாணவர் தமிழ் மன்றம் தனது செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­மை­யா­னது எனக்கு மகிழ்ச்­சி­ய­ளிக்­கின்­ற­தோடு தமிழ்மொழியை பாது­காப்­ப­தற்கு இவ்­வா­றான மன்­­றங்­களின் பணி முக்­கிய இடத்தை வகிக்­கின்­றது.

தற்­போது இளம் சமூ­கத்­தினர் சட்­டத்­து­றையில் ஆர்வ­மாக இருக்­கின்­றனர். சட்டத்­து­றையைச் சேர்ந்­த­வர்கள் தான் இந்த நாட்டின் தலை­வர்­க­ளா­கவும் அர­சியல் பிர­தி­நி­தி­க­ளாவும் செயற்­பட்­டார்கள். செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். குறிப்­பாக இந்த நாட்டின் ஜனா­தி­பதி கூட ஒரு சட்டத்தரணிதான்.

தமிழ் மொழியைப் பாதுகாத்து தமிழன் தமிழ னாக வாழ்வதற்கு சட்டத்தரணிகளின் பணி இன்றி யமையாதது. எனவே தமிழைப் பாதுகாப்பதற்காகவும் சுய கௌரவத்துடன் வாழ்வதற் காகவும் சாதி, மத, குல, இன பேதங்களை மறந்து எப்போதுமே ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்பது எனது கோரிக்கையாகவுள்ளது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :