ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தில் 105 மாணவர்கள் சித்தி

த.நவோஜ்-

வ்வாண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலயத்தில் 105 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்தர்.

வெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளின் படி வாழைச்சேனை கோறளைப்பற்று கல்வி கோட்டத்தில் 52 மாணவர்களும், ஏறாவூர்ப்பற்று 2 கல்விக் கோட்டத்தில் 50 மாணவர்களும், வாகரை கோறளைப்பற்று வடக்கு கல்விக் கோட்டத்தில் 3 மாணவர்களும் சித்தி பெற்றுள்ளனர்.

செங்கலடி விவேகானந்த வித்தியாலய மாணவன் சுதாகரன் அனோஜன் 186 பெற்று வலயத்தில் முதலிடத்தையும், மட்டக்களகப்பு மாவட்டத்தில் 8ம் இடத்தையும் பெற்றுள்ளார்.

வாழைச்சேனை இந்துக் கல்லுரியில் 29 மாணவர்களும், செங்கலடி மத்திய கல்லூரியில் 17 மாணவர்களும், வந்தாறுமூலை மத்திய மாகா வித்தியாத்தில் 11 மாணவர்களும், வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் 11 மாணவர்களும், கிரான் விவேகானந்தா வித்தியாலயத்தில் 7 மாணவர்களும், செங்கலடி விவேகானந்த வித்தியாலயத்தில் 5 மாணவர்களும் சித்தி பெற்றுள்ளனர். கடந்த வருடத்தை ஒப்பிடும் போது இம்முறை பரீட்சைப் பெறுபேறுகளில் முன்னேற்றமடைந்துள்ளதாகவும்; அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :