சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு : அங்கு பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

விமான நிலைய இயக்குனர் சுரேஷ் இன்று காலை 10.15 மணியில் அலுவலகத்தில் இருந்தபோது அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்றும் மிரட்டும் தொனியில் பேசிவிட்டு தொடர்பைத் துண்டித்துள்ளான்.

இதையடுத்து விமான நிலைய காவல்துறைக்கு இயக்குனர் தகவல் தெரிவித்து, அண்ணா முனையம் மற்றும் காமராஜர் முனையத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

அனைத்து இடங்களிலும் சோதனை செய்யப்பட்டன. பயணிகளின் உடமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டன. சந்தேகப்படும்படியான எந்த பொருளும் சிக்கவில்லை. எனவே இந்த மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. அதன்பிறகே அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :