கிரிக்கெட்டில் சாதித்த இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின், கால்பந்தின் வளர்ச்சிக்கு களமிறங்க காத்திருக்கிறார்.
கிரிக்கெட் வரலாற்றை திருப்பி போட்டவர் சச்சின். தற்போது கால்பந்தின் வளர்ச்சியிலும் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார்.
ஐ.பி.எல்.கிரிக்கெட் போல, கால்பந்தில் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) தொடர், வரும் அக்டோபர் 12 முதல் டிசம்பர் 20 வரை நடக்கவுள்ளது.
இதில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் களமிறங்குகிறது. இதில் இங்கிலாந்து அணி வீரர் டேவிட் ஜேம்ஸ் பங்கேற்கவுள்ளார்.
இந்த தொடர் குறித்து ஜேம்ஸ் கூறுகையில், ஆறு வாரங்களுக்கு முன் சச்சினுடன் பேசினேன். ஐ.எஸ்.எல்., பற்றிய கனவு திட்டங்கள் குறித்து கூறினார். இந்தியாவில் கால்பந்தை இன்னும் பிரபலமாக்கும் எண்ணத்தில் உள்ளார்.
அமெரிக்காவில் நடக்கும் மேஜர் லீக் தொடர் மிகப்பெரியது. தவிர, என்னால் அணிக்கு சிறப்பான அடித்தளம்தான் அமைக்க முடியும். ஆனால், ஐ.எஸ்.எல்., போட்டியில் சச்சினுடன் இணைந்து பணிபுரிந்து, இந்தியாவில் கால்பந்து வளர்ச்சிக்கு உதவுவேன் என்று கூறியுள்ளார்.lss
0 comments :
Post a Comment