கடந்த காலத்தில் நாங்கள் பாணந்துறையிலிருந்து களுத்துறை வரை ஒரு கணிப்பீட்டை மேற்கொண்ட போது 351 சிங்கள பெண்கள் முஸ்லிம் பெண்களாக மாறியுள்ளமை தெரிய வந்ததாக பொதுபல சேனாவின் செயலாளரான கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இரத்மலானையிலுள்ள விகாரை ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், நாங்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர்.
ஆனால் முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு எதிரானவர்கள். அந்த அமைப்புக்கும் எதிரானவர்கள். எங்கள் இனத்தின் மீது இவர்களால் இழைக்கும் அநீதிகளை பௌத்த தேர்ர்கள் என்ற வகையில் எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
எமது இனத்தின் மீதும் மதத்தின் மீதும் கொண்டுள்ள பற்று காரணமாக எங்களுக்கு எதிரான செயற்பாட்டின் போது நாங்கள் குரல் கொடுக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழில் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
0 comments :
Post a Comment