351 சிங்கள பெண்கள் முஸ்லிம் பெண்களாக மாறியுள்ளனர்!

லங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்ற சுமார் 80,000 சிங்களப் பெண்களில் அதிகமானோர் இன்று முஸ்லிம் பெண்களாக மாறிவிட்டனர்.

 கடந்த காலத்தில் நாங்கள் பாணந்துறையிலிருந்து களுத்துறை வரை ஒரு கணிப்பீட்டை மேற்கொண்ட போது 351 சிங்கள பெண்கள் முஸ்லிம் பெண்களாக மாறியுள்ளமை தெரிய வந்ததாக பொதுபல சேனாவின் செயலாளரான கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

இரத்மலானையிலுள்ள விகாரை ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், நாங்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர். 

ஆனால் முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு எதிரானவர்கள். அந்த அமைப்புக்கும் எதிரானவர்கள். எங்கள் இனத்தின் மீது இவர்களால் இழைக்கும் அநீதிகளை பௌத்த தேர்ர்கள் என்ற வகையில் எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

எமது இனத்தின் மீதும் மதத்தின் மீதும் கொண்டுள்ள பற்று காரணமாக எங்களுக்கு எதிரான செயற்பாட்டின் போது நாங்கள் குரல் கொடுக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தமிழில் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :