ஸிறாஜ்-
புனித றமழான் மாதத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை நியுஸ்டார் விளையாட்டுக் கழகமும் உதவும் கரங்கள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த உலர் உணவு வழங்கும் நிகழ்வும். தெரு மின் விழக்கு அங்குரார்ப்பண நிகழ்வும் கழகத்தின் தலைவர் எம்.ஐ.எம்.றியாஸ் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன பிரதம அதிதியாகவும்,அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சில் கௌரவ அதிதியாகவும்,அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.ஜெயருபன்,பிரதேச செயலக கணக்காளர் எம்.ஐ.நஜிமுதீன்,ஆகியோர் விசேட அதிதிகளாகவும், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் தேசிய உப தலைவர் எம்.ஐ.உதுமாலெவ்வை,ஆசிரிய ஆலோசகர் மௌலவி யூ.எம்.நியாஸ்,கலாபூஸணம் ஆசுகவி அன்புதின் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சுமார் 50க்கு மேற்பட்டவர்களுக்கான உலர் உணவுப்பொதிகள் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment