இறந்த குழந்தை ஒருநாள் கழித்து கண்விழித்த அதிசய சம்பவம் - வீடியோ

றந்துபோன குழந்தையொன்று சவப்பெட்டியில் வைக்கும் நேரத்தில் திடீரென கண்விழித்ததால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெரும் பரபரப்பு அடைந்த சம்பவம் பிலிப்பைன்ஸ் நாட்டில் இடம்பெற்றுள்ளது.

பிலிப்பைன்ஸ் ஹோரோரா என்ற பகுதியில் கடந்த 9ஆம் திகதி மூன்று வயது குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக காலை 9 மணிக்கு மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் மறுநாள் 10ஆம் திகதி பகல் ஒரு மணியளவில் இறுதிச்சடங்கிற்கு உறவினர்கள் ஏற்பாடு செய்துகொண்டிருந்தனர். 

இறுதியில் குழந்தையின் தந்தை இறந்த குழந்தையை தூக்கி சவப்பெட்டியில் வைக்கும்போது திடீரென கண் விழித்தது. அதிர்ச்சி அடைந்த தந்தை குழந்தையை சோதித்து பார்த்தபோது குழந்தைக்கு மீண்டும் உயிர் வந்திருப்பது தெரிந்தது. உடனடியாக குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இறந்து ஒருநாள் கழித்து மீண்டும் குழந்தைக்கு உயிர் வந்ததை பார்த்து மருத்துவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் வாழ்நாளில் இப்படியொரு நிகழ்ச்சியை தாங்கள் கண்டதில்லை என்று அதிசயத்துடன் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :