ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழமையாக அணியும் சிவப்பு நிறச் சால்வையை 'ரை' என்று நினைத்த தென்னாபிரிக்க பிரதிநிதியொருவர் அதனை டுவிட்டரில் பதிவு செய்த சுவாரஷ்ய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி சிறில் ரமபோஷா தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினர்.
சந்திப்பின்போது, ஜனாதிபதி மகிந்த மற்றும் தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி ரமபோசா இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டது.
அந்த புகைப்படத்தை, தென்னாபிரிக்கக் குழுவில் வந்த பிரதிநிதி அவசரமாக டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.
அதில், "இது ரமபோஷா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த போது அவர் (மஹிந்த ராஜபக்ஷ) மிக அவசரத்தில்தான் இருக்கின்றார். தனது 'ரை'யைக் கட்டக் கூட மறந்து விட்டார்...! என குறிப்பும் எழுதியுள்ளார்.
.jpg)
0 comments :
Post a Comment