ந.குகதர்ஷன் -
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனையில் இன்று சனிக்கிழமை பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்னொருவர் உட்பட இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த பதுளைவீதி - கோப்பாவெளியில் வசிக்கும் முருகுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை (வயது 48 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்ப்டுள்ளார். வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
குறித்த பெண் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருக்கும்போது முச்சக்கர வண்டி வீதியருகில் இருந்த மரத்தில் மோதியுள்ளது. அதன்போது வீதியில் வந்து கொண்டிருந்த சைக்கிளையும் முச்சக்கர வண்டி மோதியுள்ளது.
இதனையடுத்து சைக்கிளை செலுத்தியவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment