முஸ்­லிம்­களின் மத உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­காக எனது இறுதி மூச்சு வரை போரா­டுவேன்

முஸ்­லிம்­களின் மத உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­காக எனது இறுதி மூச்சு வரை போரா­டுவேன் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரி­வித்தார்.பாரா­ளு­மன்ற அமர்வில் கலந்துகொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில்,

இந்­நாட்டின் ஒற்­று­மைக்­காகப் போரா­டு­வதன் கார­ண­மாக ஒரு சிலர் என்னை விமர்­சிக்­கின்­றார்கள். முஸ்லிம் என்ற வகையில் மார்க்கக் கட­மை­களைப் பேணி நடப்­பதில் நான் முன்­ன­ணியில் இருக்­கிறேன். நான் முத­லிலும் முஸ்லிம் இறு­தி­யிலும் முஸ்லிம். அறு­ப­தாண்டு கால அர­சியலைப் பூர்த்தி செய்­தி­ருக்­கிறேன். 1989 ஆம் ஆண்டு இந்த பாரா­ளு­மன்­றத்­திற்கு நான் காலடி எடுத்­து வைத்தேன். அன்று முதல் இன்றுவரை தான் சார்ந்த சமு­தா­யத்­துக்­காக குரல் கொடுத்துவரு­கிறேன். எச் சந்­தர்ப்­பத்­திலும் சமு­தா­யத்தைக் காட்டிக் கொடுத்த வர­லாறு எனக்கு இல்லை.

இந்­நி­லையில்,ஒரு சில விஷ­மிகள் குறுந்­த­கவல் மூலம் எனக்கு கொலை அச்­சு­றுத்தல் விடுக்­கி­றார்கள். இத்­த­கையோர் இஸ்லாம் பற்றி பூரண அறி­வில்­லா­த­வர்­க­ளாக உள்­ளனர். நான் ஒரு போதும் சமு­தா­யத்தை காட்டிக்கொடுத்­தது கிடை­யாது. குற்­ற­மி­ழைக்­காத ஒருவர் மீது அநி­யா­ய­மாக வசை­பா­டினால் அம்­ம­னி­தனின் பாவங்கள் மன்­னிக்­கப்­ப­டு­மென இஸ்லாம் கூறு­கி­றது. எனவே, இவர்கள் முன்பின் தெரி­யாமல் எம்மை சபிக்­கின்­றனர். இத்­த­கை­ய­வர்­க­ளுக்கு அல்­லா­ஹு­த­ஆலா இஸ்லாம் குறித்த பூரண விளக்­கத்தை கொடுக்க வேண்­டு­மென பிரார்த்திக்கிறேன். நான் எங்கிருந்தாலும் முஸ்லிம்களின் மத உரிமைகளை வென்றெடுப்பதற்காக இறுதி மூச்சுவரை போராடுவேன் என்றார்.      
                                                                                                                                                வீ
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :