இலங்கை பத்திரிகை நிறுவனத்தினால் வருடாந்தம் வழங்கி வைக்கப்பட்டு வருகின்ற தேசிய ரீதியிலான "சிறந்த பத்திரிகையாளர் விருதுக்கு" மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் திருமதி துஷ்யந்தி சுரேஸ் (மட்டு.துஷாரா) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தமிழன் வாராந்த "ஹெல்த்" சஞ்சிகையில் மருத்துவம் தொடர்பான கட்டுரைகளை பல வருடங்களாக தொடராக எழுதிவருவதுடன், மக்கள் நலன் சார்ந்த பல்வேறுபட்ட செய்திகளையும், ஆக்கங்களை நாளாந்த பத்திரிகையில் எழுதி வருகின்ற சிறந்த ஊடகவியலாளராகவும் திகழ்ந்து வருகிறார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கை பத்திரிகை நிறுவனத்தினால் "சிறந்த பத்திரிகையாளர் விருது" மருத்துவம் தொடர்பான கட்டுரை எழுதியமைக்கு கிடைக்கப்பெற்றமையும், இது இரண்டாவது தடவையாக எதிர்வரும் 20 ஆம் திகதி கிடைக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment