சலீம் றமீஸ்-
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும், நிர்மானமும் , கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், கிழக்கு மாகாண சபை அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடி புளு இளவன் விளையாட்டுக் கழக வளாக முன்றலில் இடம் பெற்றது.
அட்டாளைச்சேனை அல்-இபாதா மன்றத்தின் தலைவர் மௌலவி என்.ரி.நஸீர் ஆசிரியர் தலைமையில் இடம் பெற்ற இந்த மாபெரும் இப்தார் நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா கலந்து சிறப்பித்தார்.
இந்த நிகழ்வின் போது அல்-இபாதா கலாசார மன்றத்தினால் நோன்பு மாதத்தில் நடாத்தப்பட்டு வந்த ஹதீஸ் மஜ்லிஸ் நோன்பு மாத விஷேட மார்க்க சொற்பொழிவின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களையும், ஆறுதல் பரிசுகளை பெற்ற மாணவர்களுக்கும், ஏனையோர்களுக்கும் பணப்பரிசுகள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் விஷேட தூஆப் பிரார்த்தனையும் இங்கு இடம் பெற்றது.
இந்த இப்தார் வைபவத்தின் போது கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமல வீர திஸாநாயக்க, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர், சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.ஏ.கே.பண்டார, அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாஸீக், உட்பட அமைச்சர்களின் இணைப்புச் செயலாளர்கள், அரச திணைக்களங்களின் தலைவர்கள், உலமாக்கள், பள்ளிவாசல்களின் பிரதி நிதிகள், விளையாட்டுக் கழகம், இளைஞர் கழகம் மற்றும் கிராம மட்ட பிரதிநிதிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment