தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் இப்தார் நிகழ்வு


எம்.வை.அமீர்-

தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் கல்விசாரா ஊழியர்களின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டின் கீழ் அல்ஹிக்மா சர்வதேச அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மௌலவி சேகுடீன் அவர்களது அனுசரணையுடன் இன்று (2014-07-21) தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட சிற்றுண்டிச்சாலை கட்டிடத்தில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் கல்விசாரா ஊழியர்களின் நலன்புரி அமைப்பின் தலைவர் றிபாயிஸ் முஹம்மட் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா சக ஊழியரும் மௌலவியுமான ரம்சீன் அவர்களால் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அல் ஹாஜ் எச்.அப்துல் சத்தார் அவர்களும் பிரயோக விஞ்ஞான பீட பீடாதிபதி கலாநிதி சபீனா இம்தியாஸ் அவர்களும் விரிவுரியாளர்கள் பிரயோக விஞ்ஞான பீட நூலகத்தின் பிரதி நூலகர், கல்வி சாரா ஊழியர் சங்கத்தலைவர் வை.முபாரக் மற்றும் கல்வி சாரா ஊழியர்களும் அவர்களது குடும்ப உறவினருமாக பெரும்திரளானோர் பங்கு கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :