நாய் குரைத்து சேவல் கூவியதால் தான் பெரும் அசொளகரியத்துக்கு உள்ளானதாக கூறி அமெரிக்க பிரஜை ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ். நாவலர் வீதியில் தங்கியிருந்த அமெரிக்க பிரஜையான ஜேம்ஸ் பேர்னின் என்பவர் அப்பகுதியில் தங்கிருந்த கிராம சேவகருக்கு எதிராகவே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நாயின் உரிமையாளரிடம், எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னர் அப்பகுதியிலிருந்து நாயை வேறு இடத்துக்கு மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதன்போது நாய் உரிமையாளரின் மனைவி 'நாய் குரைப்பதும் சேவல் கூவுவதும் எமது உத்தரவை கேட்டு அல்ல. எனினும் இவற்றை அப்புறப்படுத்த பொலிஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment