பழுலுல்லாஹ் பர்ஹான்-
காத்தான்குடி- தாருல் ஹதீஸ் அமைப்பின் அனுசரணையுடன் காத்தான்குடி கால்பந்தாட்ட லீக்கும் ,சவுண்டர்ஸ் விளையாட்டு கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த புனித இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு கடந்த 25-07-2014 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.
இங்கு விஷேட மார்க்க சொற்பொழிவை அஷ்ஷெய்க் எம். ஐ. எம். பஷீர் மதனி நிகழ்த்தினார்.
இதில் காத்தான்குடி- தாருல் ஹதீஸ் அமைப்பின் தலைவர் கலாநிதி யூ.எல்.அஹமத் அஷ்ரப் , காத்தான்குடி கால்பந்தாட்ட லீக்கின் பிரதிநிதிகள் உட்பட விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment