அமெரிக்காவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதுவர் ஒபாமாவைச் சந்திக்கவுள்ளார்

மெரிக்காவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம், அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமாவைச் சந்திக்கவுள்ளார்.

அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூததரகம் இந்தச் செய்தியினை வெளியிட்டுள்ளது.

இந்த சந்திப்பு எதிர்வரும் ஜுலை 14ம் திகதி வெள்ளை மாளிகையில் இடம்பெறவுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கையின் தூதுவராகக் கடமையாற்றிய பிரசாத் காரியவசம் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக கடந்தவாரம் நியமிக்கப்பட்டார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தன்னுடைய நியமனப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.
இவருக்கு முன்னர் இலங்கைத் தூதுவராக ஜாலிய ஜயசூரிய கடமையாற்றியிருந்தார்.

இவருக்கு பதிலாகவே தற்போது அமெரிக்காவுக்கான இலங்கைத் ததுவராக பிரசாத் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :