
சலீம் றமீஸ்-
ஜெய்கா திட்டத்தின் கீழ் 255 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நீர்வழங்கல் வடிகாலமைப்பின் ஹிங்குரான பிரதேச காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிமால் பியரத்ன தலைமையில் இடம் பெற்ற இந்த திறப்பு விழா நிகழ்வில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் திணேஷ் குணவர்த்தன பிரதம அதிதியாகவும், சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரத்ன, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும்,கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் தேச கீர்த்தி எம்.எஸ்.உதுமாலெப்பை, பாராளுமண்ற உறுப்பினர் திருமதி சிறியானி விஜய விக்ரம, பிராந்திய முகாமையாளர் ஐ.எல்.ஹைதர் அலி உட்பட மதத் தலைவர்களும், அதிகாரிகளும், முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

.jpg)
0 comments :
Post a Comment