வாகரை பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அலுவலகம் திறப்பு


த.நவோஜ்-

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அலுவலகத்தை வாகரை அம்பந்தனாவெளிக் கிராமத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனால் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வாகரை பிரதேச அமைப்பாளரும், மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்பாளருமான எஸ்.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக நகர அபிவிருத்தி அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பேர்டிபெரேரா, மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்பாளர் பொ.ரவீந்திரன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் சந்திபால, மாவட்ட மகளீர் அமைப்பின் தலைவி திருமதி.ஞானபாஸ்கரன் ருத்திரமலர், மீள்குடியேற்ற அமைச்சரின் மகளீர் மேம்பாட்டு அதிகாரி விஜிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது புதிதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொண்டவர்களுக்கான கட்சி அங்கத்துவ அட்டைகள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :