மூதூர் பிரதேச செயலாளருக்கு இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கம் வழங்கிய கௌரவம்!



அபு அலா -
மூதூர் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டு கடமையேற்றுள்ள இலங்கை நிர்வாக சேவை அதிகாரி பிர்னாஸ் இஸ்மாயிலுக்கு இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

புதிய பிரதேச செயலாளரை வாழ்த்தி வரவேற்கும் முகமாக இன்று (08) மூதூர் பிரதேச செயலகத்திற்கு நேரடியாகச் சென்ற இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.சிபான் தலைமையிலான தொழிற்சங்க உறுப்பினர்களால் பிரதேச செயலாளர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இதன்போது, புதிய பிரதேச செயலாளருக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட தொழிற்சங்க பொது செயலாளர் ஏ சிபான், அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கடுமையாக சேதமடைந்த மூதூர் பிரதேசத்தை அவசரமாக மீளக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :