முஸ்லீம் லிபரல் கட்சியின் தேசிய அமைப்பாளராக சாய்ந்தமருது இஸ்ஸதீன் நியமிக்கப்பட்டுள்ளார்

எஸ்.அஷ்ரப்கான்- 
முஸ்லீம் லிபரல் கட்சியின் தேசிய அமைப்பாளராக சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.ஐ.இஸ்ஸதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இக்கட்சியின் தலைவர் எம்.இஸ்மாயீல் முன்னிலையில் கட்சிச் செயலாளர் செயலாளர் எஸ்.எல்.றியாஸ் அவர்களால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் அகில இலங்கை சமாதான நீதவானாகிய இவருக்கு கல்முனை சமூக சேவை சங்கத்தின் சிறந்த சமூக சேவகன் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

துறைமுக அதிகார சபையின் நிறைவேற்றுக் கணக்காய்வாளராக கடமையாற்றி வருகின்ற கல்முனை சாஹிராக் கல்லூரியின் பழைய மாணவரும் சாய்ந்தமருது எஸ்.எம்.இஸ்மாயில்- எம்.செய்னம்பு தம்பததியரின் புதல்வருமாவார்.

முஸ்லீம் லிபரல் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நியமனம் பெற்றுள்ள எம்.ஐ.இஸ்ஸதீன் அவர்கள் இஸ்லாமிய சமூக சங்கத்தின் ஆலோசகராகவும்இ நூறுல் ஹூதா அஹதியா பாடசாலையின் ஆலோசகராகவும் மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஆலோசகராகவும் பணியாற்றி வருகின்றார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :