ஐ.பி.எல் பற்றிய கவலையின்றி காதலியுடன் சுற்றும் கோலி

7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இம்மாதம் 16–ம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொடங்குகிறது. போட்டி தொடங்க சில தினங்கள் இருக்கும் நிலையில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைவரும், இந்தியாவின் முன்னணி துடுப்பாட்ட வீரருமான வீராட் கோலி தனது காதலியான நடிகை அனுஷ்கா சர்மாவை சந்தித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சினிமா படப்பிடிப்புக்காக அனுஷ்கா சர்மா சென்று உள்ளார். இந்தநிலையில் கோலி ஐ.பி.எல். போட்டியில் கவனம் செலுத்தாமல் காதலியை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்து தங்களது அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திக் கொண்டனர்.

வீராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக காதலித்து வருகின்றனர். இந்திய அணி நியூசிலாந்தில் விளையாடிய போது அனுஷ்கா அங்கு சென்றார். இருவரும் அங்கு ஒன்றாக சுற்றி திரிந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :