தீவிரவாதிகள் அச்சுறுத்தல் - முஷரப் வீட்டுக்கு குண்டு துளைக்காத சுவர்

இஸ்லாமாபாத்-பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப். முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை, தேச துரோக வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு தலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளது. அவரை கொலை செய்ய முயற்சிகள் நடந்தது.

எனவே, பாதுகாப்பு கருதி அவரது பண்ணை வீட்டை பாகிஸ்தான் அரசு கிளை சிறையாக மாற்றியது. இருந்தும் தீவிரவாதிகள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

எனவே, பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர் தங்கியிருக்கும் பண்ணை வீட்டுக்கு குண்டு துளைக்காத காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டுள்ளது. 12 அடி உயரமுள்ள அந்த சுவரை பாகிஸ்தான் அரசு கட்டியுள்ளது.

முஷரப்பின் பண்ணை வீடு தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகரான சக்ஷெகாத் என்ற இடத்தில் உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :