23 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப்



புதாபியில் நடைபெற்ற பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச்சை தேர்வு தேர்வு செய்தது. 

இதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக சேவாக் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

 கொல்கத்தா பந்து வீச்சில் சாவ்லா, நரேன் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். இதனை அடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா, பஞ்சாப் வீரர்களின் துல்லியமான பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் கொல்கத்தா 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த தொடரில் விளையாடிய 4 போட்டிகளிலும் பஞ்சாப் அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :