பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி 08 மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடுகை நாளை

ஏ.ஜி.ஏ.கபூர்,அக்கரைப்பற்று- 

கொழும்பு-04 பம்பலப்பிட்டி முஸ்லிம் பெண்கள் கல்லூரிக்கான எட்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நாளை (21.04.2014) திங்கட்கிழமை 10.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெறுகின்றது.
அகில இலங்கை சோனகர் சங்கத் தலைவர் பேராசிரியர் டாக்டர் அல்-ஹாஜ் பஸ்லி நிஸார் அவர்களினால் இந்த எட்டு மாடிக் கட்டிடத்திற்கான நிதி வழங்கப்பட்டுள்ளன.

இந்த எட்டு மாடிக் கட்டிடத்தில் மாணவிகளுக்கான உயர்தர வகுப்பறை, விஞ்ஞான ஆய்வு கூடம், மொழிக் கூடம், நூலகம், கேட்போர் கூடம், தொழுகை அறை, உள்ளக விளையாட்டுக் கூடம் முதலியன அமைக்கப்படவுள்ளன.

இந்த அடிக்கல் நடும் சமய நிகழ்வில் அனைத்துப் பெற்றோர்களையும், பழைய மாணவிகளையும்,, நலன் விரும்பிகளையும் கலந்து சிறப்பிக்குமாறு கல்லூரியின் அதிபர் கலாநிதி ஹஜர்ஜான் மன்சூர் கேட்டுக் கொள்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :