மாளிகைக்காடு பிரதேச அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் -படங்கள்

ஹாசிப் யாஸீன்- 
காரைதீவு பிரதேச செயலகத்திட்குட்பட்ட மாளிகைக்காடு பிரதேச அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் மாளிகைக்காடு அல்-ஹூசைன் வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்றது.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.பாயிஸ், மாளிகைக்காடு மஸ்ஜிதுல் ஸாலிஹீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ்.ஏ.ஏ.ஜெமீல், மாளிகைக்காடு அந்-நூர் ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் ஏ.எம்.பைஸர், மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய பிரதி அதிபர் ஏ.ஏ.கபூர், ஆசிரியர் ஏ.எம்.அஹூபர் உள்ளிட்ட கிராம சேவக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உததியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்இ கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், மாதர் சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கைக்காடு பிரதேசத்தின் பாலர் பாடசாலை அபிவிருத்தி, உட்கட்டுமான அபிவிருத்திகள், பள்ளிவாசல்கள் அபிவிருத்திகள், பெண்களுக்கான சுயதொழில் உதவிகள், மாளிகைக்காடு பிரதேசத்திற்கான தனியான பொது நூலக நிர்மாணித்தல், விளையாட்டுக் கழகங்களை பலப்படுத்தல் உள்ளிட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் இத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை செய்து தருவதாக இதன்போது உறுதியளித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :