தனக்குதானே தலையில் ஆணிகளை அடித்துகொண்ட நபரொருவர் அதிசயமாக உயிர்பிழைத்துள்ள சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.
பெயர் வெளியிடப்படாத 69 வயதான சீன நபரொருவர் தனது தலையில் 10 செ.மீ (4 அங்குலம்) நீளமான 3 ஆணிகளை அவரே அடித்துள்ளார். 3 மாதங்கள் வரையில் புஜியான் மாகாணத்திலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர் கடந்த வியாழக்கிழமை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
இவரது உயிரைக் காப்பாற்றியபோதிலும் 3 ஆணிகளையும் அகற்றுவது ஆபத்தாக அமையலாம் என்பதற்காக அவற்றினை அவரது தலையிலிருந்து வைத்தியர்கள் அகற்றவில்லை.
மேற்படி நபர் தனக்குத்தானே இவ்வாணிகளை அடித்திருக்க வாய்ப்பில்லை என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இச்சம்பவம் குறித்த இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை.MN
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment